News November 1, 2024

347 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு

image

காற்று மாசுபாடு அற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியிருந்தது. அந்த வகையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும் (1 மணி நேரமும்), இரவு 7 மணி முதல் 8 மணி வரை (1 மணி நேரமும்) நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனுமதி கொடுத்த நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்ததாக 347 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Similar News

News September 12, 2025

JUST IN: சென்னை மெட்ரோ பணி ஊழியர் உயிரிழப்பு

image

சிவகங்கையைச் சேர்ந்த ஜெபஜல்தின் என்பவர் சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஊழியராக பணியாற்றி வந்தார். சூளைமேடு அப்துல்லா தெருவில் உள்ள பி.ஜி.ஹாஸ்டலில் தங்கி வந்த அவர், நேற்று நள்ளிரவு மது போதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். தடுப்பு சுவர் இல்லாமை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 12, 2025

சென்னையில் இன்று மின்தடை

image

சென்னையில் இன்று(செப்.12) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பாலவாக்கம், காமராஜர் சாலை (ம) மெயின் ரோடு, பூந்தமல்லி, நசரத்தேபட்டை, மேப்பூர், திருமங்கலம் மெட்ரோ சோன், பாடிகுப்பம் மெயின் ரோடு, காமராஜ் நகர், பெரியார் நகர், 100 அடி சாலை, எழும்பூர், ஈவிகே சம்பத் சாலை, சிஎம்டிஏ, மெரினா டவர், திருவேங்கடம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News September 12, 2025

சென்னையில் அனுமதி இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியை நடத்துகிறது. இது சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் செப்.12 முதல் அக்.5 வரை காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில் கொலு பொம்மைகள், ஆடைகள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும். அனுமதி இலவசம்.

error: Content is protected !!