News March 19, 2024

ஊர்காவல்படை ஆள் சேர்ப்பு முகாம் ஒத்திவைப்பு

image

மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி ஊர்காவல் படைக்கு (மார்ச்.19) அன்று ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மதுரை மாநகர் ஊர்காவல்படை ஆள்சேர்ப்பு தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஆள்சேர்ப்பு தேதி பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற பின்பு அறிவிக்கப்படும் என ஆணையர் லோகநாதன் அறிவித்துள்ளார்.

Similar News

News November 2, 2025

மதுரை: பைக் வாங்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

image

மதுரை அருகே தேனூரை சேர்ந்­த­வர் வடி­வேல் மகன் நிதிஷ்­கு­மார்(23). இவர் விளக்­குத்­தூண் பகு­தி­யில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். சொந்­த­மாக பைக் வாங்க ஆசைப்­பட்டு முயற்சி செய்­தும் முடி­ய­வில்லை. இத­னால் மன­மு­டைந்து இன்று வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து சம­ய­நல்­லூர் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

News November 1, 2025

மதுரை மாநகராட்சியில் புதிய மினி ரோபோட் தொடக்கம்

image

மதுரை மாநகராட்சிக்குள் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் புதிய மினி ரோபோட் வாகனம் இன்று (01.11.2025) தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி சித்ரா விஜயன், பயன்பாட்டுத் துறை உதவி பொறியாளர் அலிநீத் மற்றும் சாவனா ஸ்பேர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 1, 2025

மூத்த தமிழறிஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழுக்கும் தமிழ் துறைக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றிய வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் கீழ் ரூ.8000 உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. 2025-2026 ஆண்டிற்கான விண்ணப்பங்களை மதுரை ஆட்சியர் அலுவலக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

error: Content is protected !!