News March 19, 2024

தருமபுரி: ஓய்வு பெற்ற துணை தாசில்தார் பலி

image

தருமபுரி மாவட்டம் அரூர் கடைவீதியை சேர்ந்தவர் மோகன்குமார்(64). ஓய்வுபெற்ற துணை தாசில்தார். இவர் நேற்று சொந்த வேலை காரணமாக டூவீலரில் கருங்கல்பாடிக்கு சென்றுவிட்டு கூத்தாடிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வளைவில் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மோகன்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Similar News

News August 8, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக எஸ் .கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

தர்மபுரியில் திருமண தடை நீக்கும் கோயில் எது தெரியுமா?

image

தர்மபுரி மாவட்டம் தகட்டூரில் அமைந்துள்ள மல்லிகார்ஜூனேசுவரர் ஆலயத்தின் சிறப்பு தெரியுமா? வள்ளல் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த தலம் இது. ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் இந்த கோயிலின் மிக சிறப்பான விழாவாகும். 2 டன் எடைக் கொண்ட தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் இது. இங்குள்ள கால பைரவரை வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கும், வறுமை நீங்கும், தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பது ஐதீகம்.

News August 8, 2025

தர்மபுரி: 10th போதும் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 39 கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆக.20-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். வேலை தேடும் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!