News March 19, 2024
துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருச்சி மாவட்டம் ஊரக பகுதி மற்றும் மாநகர பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாமென செய்தி குறிப்பில் கலெக்டர் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
திருச்சி: கார் மோதி பெண் துடிதுடித்து பலி

நவல்பட்டை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கோகிலா(49) நேற்று இரவு, மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் கோகிலா தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 3, 2025
திருச்சி: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
திருச்சி அருகே இருவருக்கு கத்தி குத்து!

சமயபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (26), ராஜேஷ் (22), புகழேந்தி (37) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட அரவிந்தன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை புகழேந்தி வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


