News October 31, 2024

BREAKING: 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும், 2ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. SHARE IT.

Similar News

News August 18, 2025

இனி 10 நிமிடத்தில் ஆன்லைனில் நிலம் வாங்கலாம்

image

மளிகை பொருட்களை போல இனி நிலத்தையும் 10 நிமிடங்களில் வாங்கலாம். ZEPTO நிறுவனம், ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்துள்ளது. அதாவது, தனியார் லேண்ட் டெவலப்பர் நிறுவனத்தோடு இணைந்து இந்த வசதியை தொடங்கவுள்ளது Zepto. ஏற்கெனவே 10 நிமிட மளிகை டெலிவரிக்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். உங்கள் கருத்து?

News August 18, 2025

விசிக – சிபிஎம் இடையே கருத்து மோதல்: கூட்டணியில் சலசலப்பு

image

தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் மோதல் நிலவுகிறது. குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களை குப்பை மட்டுமே அள்ள சொல்வதில் உடன்பாடு இல்லை என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், பணி நிரந்தரம் என்பது சட்டப்பூர்வமான கோரிக்கை என வலியுறுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. யாருடைய கருத்து சரி?

News August 18, 2025

பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் புகார்!

image

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அவர்கள் நேரடியாக கேரள CM பினராயி விஜயன் மற்றும் அம்மாநில DGP ஆகியோரிடம் அளித்திருக்கின்றனர். ஹிரன்தாஸ் முரளி என்ற வேடன் மீது ஏற்கெனவே பெண் டாக்டர் ஒருவர் தொடுத்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கில் அவர் கொடுத்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

error: Content is protected !!