News October 30, 2024

தாய் மகள் இருவரையும் கட்டிப்போட்டு பணம் திருட்டு

image

பெரம்பலூர் மாவட்டம் கல்யாண் நகரில் வசித்து வரும் ஹேமலதா, அவரது மகள் அபிநயா என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தாய் மகள் இருவரையும் கை கால் களைகட்டி வைத்து வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து ஹேமலதா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 24, 2025

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் செப்.26ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News September 24, 2025

பெரம்பலூர்: வனத்துறை சார்பில் மரக்கன்றுகள்!

image

தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க நாளில், நாவல் மரத்தினை கொண்டாடுவோம் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதான அருகில், 200 மேற்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீ கட்ட முடியுமா விளையாட்டு விடுதி மாணவிகள், கேந்திர வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 24, 2025

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <>Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!