News March 19, 2024
ரோடு ஷோவில் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கியது ஏன்?

கோவையில் நேற்று பிரதமரின் ரோடு ஷோவில் அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டது தொடர்பாக பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையில் சிறுவர்கள், குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. இருந்தும் நேற்று நடைபெற்ற பாஜக பரப்புரையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.
News September 9, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.9) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று(செப்.8) சவரனுக்கு ₹720 உயர்ந்த நிலையில், இன்றும் ₹720 என தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், ஒரு சவரன் ₹81,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹140-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,40,000-க்கும் விற்பனையாகிறது.
News September 9, 2025
இன்ஸ்டா சிறுவனுக்கு Thug கொடுத்த மாடல் அவந்திகா!

அவந்திகா மோகனின் இந்த ரிப்ளையை பார்த்த 90s-கிட்ஸ்கள், ‘தம்பி போய் படிக்கிற வேலைய பாருப்பா’ என கலாய்த்து வருகின்றனர். மாடலிங் கேர்ளான அவந்திகாவுக்கு 17 வயது சிறுவன் ஒருவன், உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக இன்ஸ்டாவில் கேட்டுள்ளான். அதற்கு, ‘இப்போது நீ பரீட்சைகளை பற்றித்தான் கவலைப்பட வேண்டும், திருமணத்தை பற்றி அல்ல’ என அறிவுரை வழங்கியுள்ளார் அவந்திகா. நீங்க என்ன நினைக்கிறீங்க?