News October 30, 2024
அரியலூர் அரசு நூலகத்தில் பயின்ற 13 பேர் தேர்ச்சி

அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுக்கு பயின்று வருகின்றனர். தற்போது நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 13 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்ற தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News August 22, 2025
அரியலூர்: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
அரியலூர்: 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை

தா.பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ரவி (45). கொத்தனாரான இவர், அதே பகுதியில் 3-ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரை பள்ளியில் இருந்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். தனக்கு நேர்ந்து கொடுமை குறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் ரவியை போக்சோவில் கைது செய்தனர்.
News August 21, 2025
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய (ஆக.21) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.