News March 19, 2024
தூத்துக்குடியில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்பு

மார்ச்.1 அந்தோனியார் கோயிலில் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை மீட்கும் போது 2023 அக்டோபர் மாதம் குலசேகரப்பட்டினம் தசராவில் காணாமல் போன குழந்தை உட்பட 4 குழந்தைகளை இன்று தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
தூத்துக்குடியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(நவ.4.) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் போல்பேட்டை, 1, 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, எட்டயபுரம் ரோடு, சிவன் கோவில் தெரு,மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, , ஸ்டேட் வங்கி காலனி, அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, , பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.
News November 3, 2025
தூத்துக்குடி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கையில் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக உங்களை தொடர்பு கொள்வார்கள். அவ்வாறு தொடர்பு கொள்பவர்கள் முன்பணம் வேண்டும் அதற்கு உங்கள் க்யூ ஆர் கோர்டு அனுப்பி பணம் கேட்பார்கள். எனவே இத்தகைய மோசடி அலைபேசி அழைப்புகளை நம்பி பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE!
News November 2, 2025
தூத்துக்குடி: பக்தர்கள் கவனத்திற்கு!

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு க்ளிக் செய்து அக்கவுண்ட் உருவாக்கி உங்க விவரங்களை பதிவிட்டு முன்பதிவு பண்ணுங்க. இதில் தரிசன நேரம், வாகன நிறுத்தம், பிரசாதங்கள் என எல்லாமே தெரிஞ்சுக்கலாம். மற்றவர் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


