News March 19, 2024
இன்று முதல் தேமுதிக விருப்ப மனு

தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் (மார்ச் 19, 20) சென்னை தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு பெறலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். தொடர்ந்து, மார்ச் 21ல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடமும் நேர்காணல் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
பள்ளிக்கரணையில் குடியிருப்பு கட்டக்கூடாது: HC

<<18121841>>பள்ளிக்கரணை<<>> சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிகளை அனுமதிக்கக்கூடாது என அதிமுக மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த சென்னை HC, SC உத்தரவை பின்பற்றாமல் கட்டுமானத்தை CMDA அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, குடியிருப்பு கட்டும் பணிகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தியது. இதற்கு, சதுப்பு நிலத்தின் எல்லையை தீர்மானிக்க ஆய்வு நடக்கிறது, 2 வாரங்களில் பணிகள் முடியும் என TN அரசு பதிலளித்துள்ளது.
News October 31, 2025
இது வேற மாதிரி போலீஸ்

பிரேசிலின் வடகிழக்கே அமைந்துள்ள மராஜோ தீவில் உள்ள சோர் நகரில், காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணிகளுக்கு, கார்களோ அல்லது குதிரைகளோ பயன்படுத்துவதில்லை. மாறாக எருமைகளில் சவாரி செய்கிறார்கள். வாகனங்கள் ஈரநிலங்கள் வழியாக எளிதாகச் செல்ல முடியாததால், எருமைகளை பயன்படுத்துகின்றனர். ரோந்து பணிக்கு, எருமைகளைப் பயன்படுத்தும் உலகின் ஒரே போலீஸ் படை இவர்கள்தான். “எருமை ரோந்து” பற்றி உங்கள் கருத்து என்ன?
News October 31, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மொன்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. அதில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகலாம்.


