News March 19, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.

Similar News

News November 3, 2025

கடலூர்: துணிக்கடையில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

image

கடந்த 17.10.2025 அன்று கடலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளி துணி எடுக்க வந்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் ரூ.10,500-ஐ துணிக்கடையில் தவறவிட்டுள்ளார். இதையடுத்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், புதுநகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு பணத்தை கண்டுபிடித்து நேற்று அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

News November 3, 2025

கடலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News November 3, 2025

கடலூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

கடலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் தற்போது 8 மாத கர்ப்பமாக சிறுமி இருந்து வருகிறார். இதுகுறித்து அறிந்த மகளிர் காவல் துறையினர், நேற்று வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!