News March 19, 2024

திருவாரூரில் 21ல் மதுக்கடைகள் மூடல்

image

உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் விடுமுறை தினமாக அறிவித்து அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்

Similar News

News October 24, 2025

திருவாரூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04366-226767) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News October 24, 2025

திருவாரூரில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் கல்வி வங்கிக் கடன் முகாம் வரும் அக்டோபர் 29-ம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News October 24, 2025

திருவாரூர்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு “Get unlimited internet offer send the 5 digit code to the no. 95xxxxxxxx.” இதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்தால் ஒடிபி எண்ணை பகிர வேண்டாம் மோசடி பேர்வழிகள் இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்து பண மோசடி செய்யலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

error: Content is protected !!