News March 19, 2024
கோயம்பேடு: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் எம்பிராய்டரி இலவச பயிற்சிக்கு டோக்கன் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் சாமியானா பந்தல், பேனர் வைத்து உணவு வழங்கியதாகவும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
விஜயகாந்த் நினைவிடத்தில் ஆசி பெற்ற எம்.எஸ்.பாஸ்கர்

டெல்லியில் 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் ‘பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார். அவ்விருதை விஜயகாந்த் சமாதியில் வைத்து பாஸ்கர் ஆசி பெற்றார். இக்காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 25, 2025
தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்து

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
News September 25, 2025
சென்னை வந்தார் தெலுங்கானா முதல்வர்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்தார். சென்னை வந்த ரேவந்த் ரெட்டியை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.