News March 19, 2024

Breaking: பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு

image

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சிக்கான டோக்கன் வழங்கியதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை விதியை மீறியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 29, 2025

கடனாளியாக்கும் முதல்வர்: அரசு ஊழியர்கள் சங்கம்

image

சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகள் கடன் சார்ந்த விஷயங்களாகவே இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பது போல் ஏமாற்றி, மீண்டும் அரசுக்கே திரும்ப பெறக்கூடிய வகையில் கடனாளியாக்க முயல்வதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அச்சங்கம் சாடியுள்ளது.

News April 29, 2025

சம்மரில் சாப்பிடக் கூடாத உணவுகள்

image

கோடைக்காலத்தில் உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இறைச்சி வகைகள் குறிப்பாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது மூளையில் வெப்பத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொறித்த உணவுகள் நீர்ச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். டீ, காபி குடிப்பது சோர்வு, தலைச்சுற்றல், வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். காரசாரமான மசாலா அதிகம் சேர்த்த உணவுகள் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

News April 29, 2025

உக்ரைனில் வடகொரியர்கள்.. ஒப்புக்கொண்ட கிம்!

image

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் சண்டையிடுவதை அந்நாடு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் வசம் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தை மீட்க ரஷ்ய வீரர்களுக்கு உதவுவதாகவும், அங்கு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் எனவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 14,000 வடகொரிய வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!