News March 19, 2024
Breaking: பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சிக்கான டோக்கன் வழங்கியதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை விதியை மீறியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
கண்களை கவரும் ஃபிளமிங்கோ

தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு பறவைகளில் மிக அழாகன பறவை ஃபிளமிங்கோ. இவை குளிர்காலத்தின் தொடக்கத்தில் தூத்துக்குடி, தனுஷ்கோடி, கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்தாண்டும் நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் குவிந்துள்ளன. இளஞ்சிவப்பு நிற இறகுகள் கொண்ட கண்களை கவரும் ஃபிளமிங்கோவின் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம்.
News October 31, 2025
எப்படி இருக்கிறது பாகுபலி: The Epic? REVIEW

‘பாகுபலி The Epic’ சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம். பார்த்து பழகியது என்றாலும், Goosebumps-க்கு குறைவே இல்லை. முதல் 2 பாகங்களின் 90 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டாலும், அது பெரிதாக பாதிக்கவில்லை. பிரபாஸ் மகிழ்மதிக்கு மீண்டும் திரும்பும் காட்சி கூடுதல் மாஸாக உள்ளது. தமன்னாவின் சீன்களை கட் செய்தது மட்டும் வேதனை அளிக்கிறது. கடைசியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.
News October 31, 2025
கரூரில் CBI அதிகாரிகள் தீவிர விசாரணை

கரூர் சம்பவத்தை CBI அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற CBI அதிகாரிகள், தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலுச்சாமிபுரத்தில் உள்ள டீக்கடையில் விசாரணை செய்த அவர்கள், CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். விஜய் பேசிய இடத்தின் அமைப்பு, பரப்பு போன்றவற்றை நவீன கருவிகளுடன் முப்பரிமாண கோணத்தில் பதிவு செய்த அதிகாரிகள், அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடத்தினர்.


