News March 19, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.
Similar News
News October 24, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
கடலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04142-212660) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
கருவில் உள்ள குழந்தையை பாலினம் கண்டுபிடிக்கும் கருவி பறிமுதல்

பெண்கள் கருவில் உள்ளது என்ன குழந்தை என்று பார்க்கும் மெஷின் வைத்திருந்தது தொடர்பாக பொயனப்பாடி கிராமத்தில் செந்தில்குமார்(40) என்பவரது வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில், மருத்துவ அதிகாரிகள் குழு நேற்று (அக்.23) நேரில் சென்று சோதனை செய்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டில் இருந்த மெஷினை மட்டும் பறிமுதல் செய்து மருத்துவ குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.


