News October 29, 2024
வழிப்பறியில் ஈடுபட்ட 2 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 4 பேரை விசாரணை செய்தனர். அதில் டீக்கடை தொழிலாளியிடம் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் நேற்று(அக்.28) கைது செய்தனர், அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 17, 2025
நெல்லை போலீசில் பணியாற்ற வாய்ப்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் காத்தி மணி உத்தரவுபடி மாநகர ஊர்க்காவல் படையில் புதிய நபர்கள் சேர்க்கைக்கான தேர்வு வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெறும். 60 ஆண்கள் 5 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
நெல்லையில் அரிவாள் வெட்டு; 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

மறுகால்குறிச்சி கே ஜே நகரை சேர்ந்த இளைஞன் நாங்குநேரி பகுதி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 14ம் தேதி காதல் விவகாரத்தில் சிலர் அறிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய மறுகால்குறிச்சியை சேர்ந்த சரவணன், ராஜா மற்றும் இரண்டு இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.
News November 17, 2025
பாளை அருகே இரு தரப்பினர் மோதல்

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக நண்பர்களுடன் ஆட்டோவில் அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்துக் கொண்டே கூச்சலிட்டபடி சென்றனர். இதனை மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் தட்டி கேட்டனர்.அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 4 மாணவர்கள் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


