News October 29, 2024
ஒசூரில் 7 பட்டாசு குடோன்களுக்கு ‘சீல்’

ஒசூா் அருகே பேகேப்பள்ளி பகுதியில் சந்திரசேகா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் 8 பட்டாசு கடைகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு கடைக்கு மட்டும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்தது வருவாய்த் துறையினா் சோதனை செய்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கடையில் அடுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. போலீசார் குடோன்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.
Similar News
News August 22, 2025
கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு Forklift Operator (ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர்) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது பயிற்சி இனி பெற www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தங்குமிடம் & உணவு இலவசமாக வழங்கப்படும்.
News August 22, 2025
கிருஷ்ணகிரி: 10th பாஸ் போதும் காவல்துறையில் வேலை

கிருஷ்ணகிரி இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 22, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.22) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க