News March 19, 2024
பிடிக்கவில்லை என்றால், இதை செய்யுங்கள்

இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருட்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால், ‘தேசிய நுகர்வோர் உதவி மையத்தில்’ புகார் செய்யலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், 8800001915 என்ற எண்ணில் உங்கள் புகார்களை SMS வாயிலாக அனுப்பலாம். அரசு இணையதளத்திலும் குறைதீர்க்கும் வசதி உள்ளது.
Similar News
News October 31, 2025
எப்படி இருக்கிறது பாகுபலி: The Epic? REVIEW

‘பாகுபலி The Epic’ சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம். பார்த்து பழகியது என்றாலும், Goosebumps-க்கு குறைவே இல்லை. முதல் 2 பாகங்களின் 90 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டாலும், அது பெரிதாக பாதிக்கவில்லை. பிரபாஸ் மகிழ்மதிக்கு மீண்டும் திரும்பும் காட்சி கூடுதல் மாஸாக உள்ளது. தமன்னாவின் சீன்களை கட் செய்தது மட்டும் வேதனை அளிக்கிறது. கடைசியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.
News October 31, 2025
கரூரில் CBI அதிகாரிகள் தீவிர விசாரணை

கரூர் சம்பவத்தை CBI அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற CBI அதிகாரிகள், தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலுச்சாமிபுரத்தில் உள்ள டீக்கடையில் விசாரணை செய்த அவர்கள், CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். விஜய் பேசிய இடத்தின் அமைப்பு, பரப்பு போன்றவற்றை நவீன கருவிகளுடன் முப்பரிமாண கோணத்தில் பதிவு செய்த அதிகாரிகள், அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
News October 31, 2025
₹1000-ல் குழந்தையின் Future-ஐ பாதுகாக்கும் திட்டம்

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். <


