News March 19, 2024
வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவின் இன்றைய நிலை?

வாரிசு அரசியலை எதிர்த்து மிகப்பெரிய கலகம் செய்து, பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர் தான் வைகோ. ஆனால், காலச் சுழற்சியில் சிக்கிய அவர், கடந்த தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல் போனது. வேறுவழியில்லை!, மீண்டும் அவரே வாரிசு அரசியலை கையிலெடுத்து, தற்போது மகனுக்கு திருச்சி தொகுதியை விடப்பிடியாக கேட்டு பெற்றிருக்கிறார்.
Similar News
News April 26, 2025
மழையால் IPL போட்டி பாதிப்பு

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் PBKS vs KKR ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த PBKS அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்த களமிறங்கிய KKR அணி, ஒரு ஓவருக்கு விக்கெட்டுகள் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், மைதானம் முழுவதும் மூடப்பட்டது.
News April 26, 2025
தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
News April 26, 2025
மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் காலமானார்

நாட்டின் மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். கேரளாவை சேர்ந்த இவர், இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில்(ICHR) அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். கேரள வரலாறு, தமிழக வரலாறு, பண்டைய இந்திய வரலாறு, வரலாறு வரைவியல் முறையியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.