News October 28, 2024
நெல்லை மாவட்டத்தில் டிஎஸ்பி தலைமையில் இரவு ரோந்து பணி

நெல்லை புறநகர் மாவட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஜார் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்கள் கூட்டம் காணப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து அதிகாரிகள் காவலர்கள் பெயர் விபரங்கள் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 23, 2025
நெல்லை: டிகிரி போதும்! ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

நெல்லை மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <
News August 23, 2025
நெல்லை: மாணவர்கள் & பெற்றோர்கள் கவனத்திற்கு!

நெல்லை மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களே; உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான புகார்கள் இருந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் உதவி எண் ஆகும். மாணவர்களின் கல்வி சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். *ஷேர் செய்யுங்கள்*
News August 23, 2025
சுவரில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க நடவடிக்கை

நெல்லை மாவட்டத்தில் பூங்காக்கள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டு, சமூக நீதி வாசகங்கள் எழுதப்படுகின்றன. திறந்தவெளி சிறுநீர் கழிக்காத மாநகரமாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது. பாளை அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்திமதி பள்ளி சுவரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர், மாந்திரீக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் சிரிப்பையும் சிந்தனையும் ஏற்படுத்தி உள்ளது. *ஷேர் பண்ணுங்க