News October 28, 2024
நெல்லை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இன்று (அக்.28) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்டவைகள் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர உதவிக்கு அட்டவணையில் உள்ள காவலர்களை மாநகர பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News November 17, 2025
நெல்லை போலீசில் பணியாற்ற வாய்ப்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் காத்தி மணி உத்தரவுபடி மாநகர ஊர்க்காவல் படையில் புதிய நபர்கள் சேர்க்கைக்கான தேர்வு வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெறும். 60 ஆண்கள் 5 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
நெல்லையில் அரிவாள் வெட்டு; 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

மறுகால்குறிச்சி கே ஜே நகரை சேர்ந்த இளைஞன் நாங்குநேரி பகுதி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 14ம் தேதி காதல் விவகாரத்தில் சிலர் அறிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய மறுகால்குறிச்சியை சேர்ந்த சரவணன், ராஜா மற்றும் இரண்டு இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.
News November 17, 2025
பாளை அருகே இரு தரப்பினர் மோதல்

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக நண்பர்களுடன் ஆட்டோவில் அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்துக் கொண்டே கூச்சலிட்டபடி சென்றனர். இதனை மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் தட்டி கேட்டனர்.அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 4 மாணவர்கள் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


