News March 19, 2024
விழுப்புரம்: பாஜக – பாமக இடையே கையெழுத்து

பாஜக-பாமக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 19) காலை கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி விழுப்புரத்தில் பாமக போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News October 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் இன்று அக்.30 விழுப்புரம் மாவட்ட ஆயுதபடை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 27 நபர்கள் கலந்து கொண்டு ஒரு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனம் என மொத்த நான்கு வானங்கள் ரூ. 68,700 தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொகை முழுவதும் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
News October 30, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.30. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


