News March 19, 2024
பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி 10வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஸ்கைலாப் . இவர் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுள்ளார். அங்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு சுற்றுச்சுவர் கட்டக்கூடாது என கேட்டு கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 25, 2025
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நீக்கம்

கோவை மாவட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளராக தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசன், மாநகர் மாவட்ட செயலாளராக நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக செந்தமிழ் செல்வனை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
News September 25, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.09.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 25, 2025
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

கோவை மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன் டெக்னீஷியன் மற்றும் செயலி பயிற்சியாளர் பிரிவில் ஒரு காலியிடம் உள்ளது. SSLC அல்லது சமமான தகுதி, மின்னணுவியல் டிப்ளமோ அவசியம். விண்ணப்பங்கள் செப்.,30 மாலை 5.30க்கு முன், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், ஜி.என். மில்ஸ் அஞ்சல், கோவை என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்