News March 19, 2024
மார்ச் 24இல் பரப்புரையை தொடங்குகிறார் இபிஎஸ்

மார்ச் 24 ஆம் தேதி இபிஎஸ் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்ச் 24 – 31 வரை தனது முதற்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார். மார்ச் 24 – திருச்சி, மார்ச் 25 – தூத்துக்குடி, நெல்லை, மார்ச் 27 -குமரி, தென்காசி, மார்ச் 28 – விருதுநகர், ராமநாதபுரம், மார்ச் 29 – காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 30 – புதுச்சேரி, கடலூர், மார்ச் 31 – சிதம்பரம், நாகையில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
Similar News
News January 20, 2026
இளமையான தோற்றம் பெற இது அவசியம்

அழகான மற்றும் இளமையான தோற்றம் கொண்ட சருமத்துக்கு, வெளிப்புறத் தோல் பராமரிப்பு மட்டுமே உதவாது. நாம் தினசரி உணவில் சரியான ஊட்டச்சத்து சேர்ப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, தோலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி கொண்ட உணவுகள் என்னென்னவென்று மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE.
News January 20, 2026
ரூ.4.15 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்து சாதனை

2025-ல் இந்தியா ரூ.41.5 கோடிக்கு எலக்ட்ரானிக் பொருள்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி அதிகரிப்பால், நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி, அந்நியச் செலாவணி வரத்தும் மேம்பட்டுள்ளது என்றும், 4 செமி கண்டக்டர் ஆலைகள் வணிக ரீதியான உற்பத்தியை தொடங்குவதால் 2026-லும் இந்த வளர்ச்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
இனிமேல் அமைதியை பற்றி யோசிக்க மாட்டேன்: டிரம்ப்

8 போர்களை நிறுத்த நடவடிக்கை எடுத்தும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில், நோபல் பரிசு கிடைக்காததால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை இல்லை. அமெரிக்க நலனை பற்றி மட்டுமே சிந்திக்க போவதாக தெரிவித்துள்ளார்.


