News October 28, 2024

ரேஷன் கடைகளுக்கு நவ.16ஆம் தேதி விடுமுறை

image

தீபாவளி பண்டிகையையொட்டி அக்.27ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு நவ.16ஆம் தேதி அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்படும் போது கைபேசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று (நவ.11) நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

News November 11, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (நவ.11) மாவட்டங்களில் அனைத்து துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்துகொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!