News October 28, 2024

திருப்பூர்: சூரன் பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி

image

முருகனுக்கு வழிபாடு நடத்தக்கூடிய கந்தசஷ்டி விழாவானது வரும் 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அழகுமலை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய சூரன் அவதார பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.

Similar News

News August 25, 2025

திருப்பூரில் நூற்றாண்டு கண்ட மூதாட்டி!

image

திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் அன்னபூரணி என்ற மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா குடும்ப சங்கமமாக நடைபெற்றது. 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, ஒரே மாதிரி உடை அணிந்து, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

News August 25, 2025

திருப்பூரில் நீங்களும் மேனேஜர் ஆகலாம்!

image

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’மருத்துவ நிர்வாக அதிகாரி’ பணிக்கான பயிற்சி திருப்பூரிலேயே வழங்கப்படுகிறது. கடந்த ஆக.1 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் உள்ளன. பயிற்சி பெற்றால் உங்களுக்கு வேலை நிச்சயம். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<> இங்கே கிளிக். <<>>(SHARE IT)

News August 25, 2025

திருப்பூர்: விளையாட்டால் நடந்த விபரீதம்!

image

திருப்பூர்: தாராபுரத்தில் காதணி விழாவிற்கு சென்ற காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த்(19) நேற்று(ஆக.24) அமராவதி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அஸ்வந்த், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் யாரும் குளிக்க கூடாது, என போடப்பட்ட எச்சரிக்கையை மீறி விளையாட்டாக குளித்ததால் இந்த விபரீதம் நடந்தேறியுள்ளது எனத் தெரிவித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!