News October 28, 2024

அம்பை: 3 டன் ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது!

image

அம்பை வட்டார பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று(அக்.,28) அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனில் 3 டன் அரிசி கடத்தல் முயன்றது தெரிய வந்தது. ஆண்டி(35), முப்புடாதி(29), முன்னீர்பள்ளம் முருகன்(27), சிவக்குமார்(26), மதன்குமார்(29) ஆகியோரை கைது செய்து அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 6, 2026

நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர், அவரைச் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கைகளை இரண்டு பிரதிநிதிகளாக எடுத்து வந்து மாவட்ட கலைக்டரிடம் நேரில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

நெல்லை: : இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News February 6, 2026

BREAKING: நெல்லையில் கடன் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை

image

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் இவருக்கு மனைவியும் 2 மகன், 3 மகள்களும் உள்ளனர். இவர் புதியதாக கட்டிய வீட்டிற்கு உரிய மாத தவணை கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்தவாறு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். இதுக்குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை

error: Content is protected !!