News October 28, 2024
அரசு அதிகாரிகளை ஏமாற்றியவர் கைது

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் இயங்கி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலமாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல்கள் தருவதாக கூறி கமிஷன் பணத்தைக் கேட்டு ஏமாற்றி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சார்ந்த தாவூத் இப்ராஹிம் என்பவர், சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஜினிகுமார் தலைமையில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News August 13, 2025
247 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளில் தவறாமல் கிராம சபையை கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
News August 13, 2025
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

வேலூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <
News August 13, 2025
APPLY NOW: வேலூர் கூட்டுறவு துறையில் வேலை

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலி பணியிடங்கள் உள்ளன. அதில் வேலூரில் மட்டும் 79 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <