News October 28, 2024
காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பரந்தாமன்(39) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெருஞ்சேரி சுந்தரப்பன்சாவடி அருகே எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதயறிந்த முதல்வர் ஸ்டாலின் காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிட நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
மயிலாடுதுறை: அரசு வேலை! EXAM கிடையாது

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 13, 2025
மதுபான கடைகளை மூட உத்தரவு

தமிழக அரசு உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறினால் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், தனியார் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
மயிலாடுதுறை: ரயிலில் பாய்ந்து தற்கொலை!

சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அசோக் இளவரசன் (33). என்ஜினீயரான இவர் குடிநீர் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதில் கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென உப்பனாறு ரெயில்வே பாலம் அருகே வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்துகொண்டார்.