News October 28, 2024

இந்தியா – சீனா பதற்றம் எப்போது தணியும்?

image

எல்லையில் இந்தியா- சீனா தங்களது வீரர்களை திரும்பப் பெறுவது முதல் ஸ்டெப் என MEA ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனா முந்தைய நடவடிக்கைகளையே தொடராது என்பதை இந்தியா உறுதி செய்த பின்பே பதற்றம் தணியும் எனவும், நமது ரோந்து உரிமையை பெறுவதற்கு இன்னும் நேரம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், வீரர்களை திரும்பப் பெற்ற பின், எல்லையை பாதுகாப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 10, 2025

தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

image

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

News July 10, 2025

276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை

image

தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்களில் <<17013093>>இன்டர்லாக்<<>> அமைப்புகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளனர். அதேநேரம், தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்களே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News July 10, 2025

பாலியல் புகாரளித்த நடிகை… சிக்கும் சாமியார்

image

இந்திய வம்சாவளி நடிகை மலேசியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செபாங் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நடிகை லிசால்லினி கனரன் சென்றபோது, அங்கிருந்த சாமியார் அவரது மார்பை தொட்டுள்ளார். பின்னர் நடிகை மீது நீரை தெளித்துள்ளார். ஜூன் 21-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகை லிசால்லினி போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவான சாமியாரை போலீஸ் தேடி வருகிறது.

error: Content is protected !!