News October 28, 2024
இந்தியா – சீனா பதற்றம் எப்போது தணியும்?

எல்லையில் இந்தியா- சீனா தங்களது வீரர்களை திரும்பப் பெறுவது முதல் ஸ்டெப் என MEA ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனா முந்தைய நடவடிக்கைகளையே தொடராது என்பதை இந்தியா உறுதி செய்த பின்பே பதற்றம் தணியும் எனவும், நமது ரோந்து உரிமையை பெறுவதற்கு இன்னும் நேரம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், வீரர்களை திரும்பப் பெற்ற பின், எல்லையை பாதுகாப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
ADMK செய்தது மனிதநேயமற்ற செயல்: செல்வப்பெருந்தகை

திருச்சி <<17507617>>துறையூரில் அம்புலன்ஸை<<>> அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயல் என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இந்த மிரட்டல் அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
News August 25, 2025
விரைவில் இந்தியா வரும் உக்ரைன் அதிபர்

PM மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர உள்ளார். இந்த தகவலை பகிர்ந்த அந்நாட்டு தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக், பயணத் தேசி விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவுடனான போர் மற்றும் இந்தியா – உக்ரைன் உறவு குறித்து, மோடியுடன் ஜெலன்ஸ்கி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போரை நிறுத்த ஏற்கனவே புதினிடமும் மோடி ஆலோசித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News August 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.