News October 27, 2024

நாளை வேலூர் வருகிறார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

image

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியும், காட்பாடி சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியின் கிளையை காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில் நாளை 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த அகாடமியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைக்கிறார் என சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 5, 2026

வேலூர்: “அம்மா நான் சாக போறேன்…” மாணவன் தற்கொலை!

image

ரெட்டியார்பல்லியை சேர்ந்த ஜீவநேசன், குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் யோகநேசன் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் யோகநேசன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் “படி படியென தொடர்ந்து வற்புறுத்துவதால்” தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தது. இதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

வேலூர்: 7 மாத குழந்தை திடீர் சாவு; கதறும் பெற்றோர்!

image

கீழ்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தம்பதி பிரசாந்த் (32), மோகனா.இவர்களது 7 மாத பெண் குழந்தை மிதுலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.4) காலை குழந்தைக்கு பாலூட்டுவதற்காக மோகனா தூக்கியபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது.

News February 5, 2026

வேலூரில் துடிதுடித்து பலி!

image

பரதராமி பகுதியைச் சேர்ந்த ஈஷாக் (35). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று (பிப்.4) பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் டி.பி.பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. அதில் ஆட்டோ டிரைவர் ஈஷாக் உயிரிழந்தார, மேலும் 2 பயணிகளை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதுகுறித்து பரதராமி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!