News March 19, 2024
ஆம்பூரில் ரூ.80,500 பறிமுதல்

ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று (மார்ச்.18) சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டாடா ஏ.சி வாகனத்தில் கே.வி குப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபாலன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் மோகனிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News October 30, 2025
பார்வையற்ற மாற்று திறனாளிக்கு இசைக்கருவி வழங்கிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் கண் பார்வையற்ற மாற்று திறனாளி ஒருவர் தனக்கு இசை கருவி வேண்டுமென கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று (அக்.30) மாவட்ட ஆட்சியர் சமூக (CSR) பங்களிப்பு நிதியில் இருந்து கொள்முதல் செய்த ரூ. 62000/- மதிப்பிலான இசைக்கருவியை ஆட்சியர் சிவசாவுந்திரவள்ளி அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.
News October 30, 2025
ஜோலார்பேட்டை: தலை துண்டாகி வாலிபர் பலி

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 1 வது பிளாட்பாரம் அருகே சரக்கு ரயில் செல்லும் வழியில் இன்று (அக்.30) காலை 8 மணி அளவில் சரக்கு ரயில் முன் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவர் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News October 30, 2025
திருப்பத்தூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


