News March 19, 2024
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் நேற்று (மார்ச் 18) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து, பலமுறை பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 13, 2025
விழுப்புரம்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
விழுப்புரம்: பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பழனி (53) உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தார். மேற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, 1997–ஆம் ஆண்டில் 2–ஆம் கட்டமாக பணியில் சேர்ந்தவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெற்று வந்தவர் நேற்று(நவ.12) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
News November 13, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.


