News October 27, 2024
புதுகை: கண்காணிப்பு கோபுரம் நாளை திறப்பு

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை கீழ ராஜவீதி மற்றும் வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே திறந்து வைக்க உள்ளார்.
Similar News
News November 9, 2025
புதுகை: புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

தமிழக அரசு சிறு தொழில் வளர்ச்சிக்கான மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 % அல்லது 75 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இதற்கு 12th தேர்ச்சி பெற்ற, 21 வயது பூர்த்தியடைந்த புதிய தலைமுறை தொழில் முனைவோர் www.msme online.tn.gov.in/neets என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து, அதனை மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 9, 2025
புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுமடை SOC-யில் நேற்று அடையாளம் தெரியாத யாசகம் பெறும் நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து விராலிப்பட்டி சரக VAO அளித்த புகாரின் அடிப்படையில், கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கு தடை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (10.11.2025) நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று (09.11.2025) மற்றும் நாளை (10.11.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.


