News October 27, 2024
அனிதாவை நினைவுகூர்ந்த விஜய்

விஜய்யின் 45 நிமிட பேச்சு தமிழக அரசியல் களத்தின் பல அம்சங்களை தொட்டுச் சென்றது. குறிப்பாக நீட் தேர்வு குறித்து அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது. தகுதி இருந்தும் நீட் தேர்வு காரணமாக சகோதரி அனிதாவை இழக்க நேர்ந்தது என்ற அவர், எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை, சகோதரி அனிதா உயிரிழந்த போதும் நான் பெற்றேன் என்றார். ஆக, நீட் எதிர்ப்பிலும் தவெக தீவிரமாக ஈடுபடும் எனத் தெரிகிறது.
Similar News
News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
News July 10, 2025
276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை

தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்களில் <<17013093>>இன்டர்லாக்<<>> அமைப்புகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளனர். அதேநேரம், தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்களே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News July 10, 2025
பாலியல் புகாரளித்த நடிகை… சிக்கும் சாமியார்

இந்திய வம்சாவளி நடிகை மலேசியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செபாங் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நடிகை லிசால்லினி கனரன் சென்றபோது, அங்கிருந்த சாமியார் அவரது மார்பை தொட்டுள்ளார். பின்னர் நடிகை மீது நீரை தெளித்துள்ளார். ஜூன் 21-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகை லிசால்லினி போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவான சாமியாரை போலீஸ் தேடி வருகிறது.