News March 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தம் – கலெக்டர்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 3, 2025

போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

image

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News November 3, 2025

தேனி: குடிப்பழகத்தால் பறிபோன உயிர்

image

போடி குப்பிநாயக்கன்பட்டி மருது பாண்டியர் தெருவை சேர்ந்தவர்கள் ராஜபிரபு (35) – கீர்த்தனா (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ராஜபிரபு மது பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டில் உள்ள பொருட்கள், குழந்தைகளின் கொலுகளை விற்று மது குடித்துள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

News November 3, 2025

தேனி: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

தேனி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!