News March 19, 2024
கரூர்: ரூ.3,38,388 பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர், சின்னரெட்டியப்பட்டி , ஆர்.டி.மலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வேனில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.3,38,388 ரொக்க பணத்தை பறக்கும் படை அலுவலர் லலிதா தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 13, 2025
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 18 மற்றும் 19 பகுதிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில், இன்று (13.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் உள்ளனர்.
News August 13, 2025
கரூர்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இலவச திறன் பயிற்சி!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கரூர் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து மெர்ச்சன்டைசர் குவாலிட்டி கன்ட்ரோல், மற்றும் இன்ஸ்பெக்சன் ஹோம் டெக்ஸ்டைல்ஸ், போன்ற பயிற்சிகள் 100 சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் புகளூர் பகுதியில் பயிற்சி நடத்தப்பட இருகின்றன. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 9489736687 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
News August 13, 2025
கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.