News March 19, 2024
வந்தவாசி: அனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று(மார்ச்.18) அனுமந்த வாகனத்தில் அருள்மிகு ஶ்ரீ ரங்கநாத பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தனர்.
Similar News
News October 24, 2025
தி.மலை: ‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.24) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, தி.மலை- வி.பி.எஸ்.சி கட்டிடம், மேற்கு ஆரணி- சமுதாயக்கூடம் தேவிகாபுரம், தெள்ளார்- தனியார் திருமண மண்டபம் சீயமங்கலம், அனக்காவூர்- தனியார் திருமண மண்டபம் எச்சூர், கலசப்பாக்கம்- தனியார் திருமண மண்டபம் சிங்காரவாடி மற்றும் கீழ்பென்னாத்தூர்- தனியார் மண்டபம், கல்லாயி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
News October 24, 2025
திருவண்ணாமலை: குறைந்த விலையில் வாகனம் வேண்டுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலூர் சரக போதைப்பொருள் குழுவினரால் போதை பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 10 இரண்டு சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை 30.10.25 அன்று ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. முன்பணம் செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 24, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


