News March 19, 2024
ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
இலங்கை சிறையிலிருந்து தொண்டி மீனவர்கள் விடுதலை

தொண்டி அருகே நவ.,3 ல் நம்புதாளையைச் சேர்ந்த ரமேஷ் நாட்டுப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூவருடன் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த அவர்களை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. படகும் விடுவிக்கப்பட்டது.
News December 13, 2025
ராமநாதபுரம்: Driving Licence-க்கு முக்கிய Update!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News December 13, 2025
பரமக்குடி: முதியவர்களை கொன்ற குற்றவாளிக்கு குண்டாஸ்

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.


