News October 27, 2024

தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

image

தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நெடுந்தீவு அருகே கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை படகுடன் சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் செயலால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Similar News

News July 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 10 – ஆனி 26 ▶ கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: வளர்பிறை.

News July 10, 2025

கணிக்க முடியாத கேம் சினிமா: இயக்குநர் ராம்

image

ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ என்ற படம் 4-ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய ராம் ‘பறந்து போ’ சிறப்பு காட்சியை பார்த்தவர்கள், ராமின் காமெடியை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். சினிமா என்பது கணிக்க முடியாது கேம் என கூறிய அவர் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்றார்.

News July 10, 2025

பால் குடிக்காத குழந்தை… தாய் செய்த கொடூரம்

image

தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வை (postpartum depression) நாம் பொருட்படுத்துவதில்லை. இதனால் சில நேரம் விபரீதங்கள் கூட நடக்கலாம். பெங்களூருவில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை பால் குடிக்காமல் விடாமல் அழுதபடியே இருந்ததால் எரிச்சலடைந்த தாய் ராதா(27), கொதிக்கும் நீரில் குழந்தையை போட்டு கொன்றுள்ளார். இதையடுத்து அவரை போலீஸ் கைது செய்தனர். அவரின் கணவர் மதுவுக்கு அடிமையானவராம்.

error: Content is protected !!