News October 27, 2024

ALERT: ரேஷன் கடைகள் இன்று திறந்திருக்கும்

image

ரேஷன் கடைகள் இன்று (அக்.27) திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி ஆகும். அதனை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தங்குதடையின்றி மக்கள் வாங்க ரேஷன் கடைகள் இன்று திறந்திருக்கும் என்றும், அதற்கு பதிலாக நவம்பர் மாதம் 16இல் அக்கடைகளுக்கு விடுமுறை நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News January 19, 2026

குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

News January 19, 2026

21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

image

வாழைப்பழங்களிலேயே செவ்வாழையில் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.

News January 19, 2026

சமூக நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜக: CPI

image

EPS யாருடனிருந்து தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என CPI வீரபாண்டியன் கூறியுள்ளார். இலவசங்களே கூடாது என PM மோடி சொல்வதாக கூறிய அவர், நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜகவுடன் நின்றுகொண்டு, EPS சொல்லும் வாக்குறுதிகளை எப்படி நம்பமுடியும் என கேட்டுள்ளார். மேலும், வாக்குறுதி அளிப்பது இயல்புதான் எனவும் இந்த காரணங்களால் EPS-ன் வாக்குறுதியை ஏற்க இயலாது என்றும் பேசியுள்ளார்.

error: Content is protected !!