News October 27, 2024
காஞ்சிபுரத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இன்று இயங்கும். தீபாவளி பண்டிகை வருகிற அக்.31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் நோக்கில் இன்று (அக்.27) ஞாயிற்றுக்கிழமை, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை இன்று வாங்கி கொள்ளுங்கள.
Similar News
News February 7, 2026
காஞ்சிபுரம்: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News February 7, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வருகின்ற பிப்.8ஆம் தேதி அன்று தொகுதி-II மற்றும் தொகுதி–IIA க்கான எழுத்துத்தேர்வுகள் காலை மற்றும் மதியம் என இருவேளைகளிலும் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளதால் வழிகாட்டு முறையை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
News February 7, 2026
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்


