News October 26, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து; மரணம் 

image

அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் இன்று பைக்கில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சங்கரன்பாடி கிராமத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மகாலிங்கத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்தார். அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்படும் போது கைபேசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று (நவ.11) நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

News November 11, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (நவ.11) மாவட்டங்களில் அனைத்து துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்துகொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News November 11, 2025

ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு!

image

மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

error: Content is protected !!