News October 26, 2024

ஆட்டுக்குட்டியை முழுங்கிய நிலையில் மலைப்பாம்பு

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் ஆட்டுக்குட்டியை முழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை லாபகரமாக பிடித்தனர். பின் மலைப்பாம்பினை வனத்துறையினரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றனர்.

Similar News

News January 31, 2026

எரியோடு அருகே பயங்கர விபத்து!

image

எரியோடு அருகே இன்று அதிகாலை தொட்டணம்பட்டி–நலமானார்கோட்டை இடையே சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் அடையாளம் தெரியாத நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 31, 2026

பழனியில் இன்று முதல் இலவசம்!

image

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி, வ.உ.சி. பஸ் நிலையத்திலிருந்து கோவில் அடிவாரத்திற்குப் பக்தர்கள் சென்று வரக் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு, 3 அரசு டவுன் பேருந்துகள் மற்றும் 3 மினி பேருந்துகள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News January 31, 2026

திண்டுக்கல்: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!