News March 19, 2024

மோடியின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையம்

image

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமர் மோடிக்கு தெரியும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், “வெற்றி பெறும் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். மிகக் குறைந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமே மோடியின் பிடியில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

Similar News

News August 19, 2025

INDIA கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

image

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News August 19, 2025

1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

CM-ஐ சந்திக்கும் நயினார்.. ஏன் தெரியுமா?

image

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு CM ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளை தாண்டி அனைவரும் ஆதரித்தோம் என வரலாற்றில் பேசப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!