News October 26, 2024

ரயில் சேவைகளில் 2 நாட்களுக்கு மாற்றம்

image

மதுரையில் இருந்து இன்று (அக்.26) இரவு 11.35க்கு புறப்படவுள்ள (02121) ஜபல்பூர் சிறப்பு ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் – பெரம்பூர் – கொருக்குப்பேட்டை தடத்தில் செல்லும். இந்த ரயில் நாளை (அக்.27) தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இயங்காது. மதுரையில் இருந்து (அக்.27), 00.55க்கு கிளம்பும் சம்பர்க் கிரந்தி துரித ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் வழியாக செல்லும்.

Similar News

News February 18, 2026

காஞ்சிபுரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

காஞ்சி மக்களே பண மோசடியா? click!

image

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, காஞ்சி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
உடல்நலம் குன்றிய அல்லது இறந்த பறவைகளைக் கையாளுபவர்கள், இறைச்சிக் கூடங்களில் பணிபுரிபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தூய்மையற்ற சூழல் நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதோடு பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது அவசியம்.

error: Content is protected !!