News October 26, 2024

ஆத்தூர் அருகே கஞ்சா விற்றவர் கைது!

image

ஆத்தூர் அடுத்த தென்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் போனிஸ் நந்தா (26). இவர், நேற்று முன்தினம் அமணம்பாக்கம் சுடுகாட்டில், கஞ்சா விற்பனை செய்து வருவதாக, தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், போனிஸ் நந்தாவை பிடிக்க முயன்றபோது, தப்ப முயன்ற அவருக்கு இடறி கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது. போனிஸ் நந்தாவை மீட்ட போலீசார், பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 13, 2025

செங்கல்பட்டில் 13,064 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!

News August 13, 2025

செங்கல்பட்டில் நாளை கடைசி!

image

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த தகுதியான நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 12) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!