News October 26, 2024
புதுகை ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சந்தைப்பேட்டையில் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி வருகின்ற புதன்கிழமை (அக்.30) ஆட்டுச்சந்தை நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
Similar News
News August 24, 2025
புதுக்கோட்டை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுகை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
News August 24, 2025
புதுக்கோட்டையில் இவ்வளவு பழமையான இடங்களா?

புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பழமையான வரலாறுகளை கொண்டுள்ளது.
குடுமியான்மலை கல்வெட்டு – 2300 ஆண்டுகள் பழமை
குன்றாண்டார் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
கொடும்பாளூர் மூவர் கோயில் – 1000 ஆண்டுகள்
நார்த்தாமலை, விஜயாலய சோழீஸ்வரம் – 1100 ஆண்டுகள் பழமை
திருமயம் கோட்டை – 400 ஆண்டுகள் பழமை
மலையடிப்பட்டி – 300 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News August 24, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.