News October 26, 2024

ரயில் பயணத்தில் ஆபத்தா? இந்த நம்பரை வெச்சிக்கோங்க

image

ரயில் பயணம் இனிமையானது என்றாலும், அதில் ஆபத்துகளும், அசம்பாவிதங்களும் அதிகம். தண்டவாளத்தில் கால் மாட்டிக் கொள்வது, கொள்ளையர்கள் புகுவது, நமது சீட்டில் வேறு நபர்கள் அமர்ந்து எழ மறுப்பது, ரயிலில் இருந்து கீழே விழுவது, நகைகள் ஜன்னல் வழி விழுவது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கலாம். இதுபோன்ற சமயங்களில் 139 என்ற எண்ணுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னால் போதும். 5 நிமிடத்தில் நமக்கு உதவ போலீஸ் வந்துவிடும்.

Similar News

News July 9, 2025

புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

image

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

News July 9, 2025

ஆதார் கார்டு முதன்மை அடையாளம் அல்ல: UIDAI

image

ஆதார் கார்டு ஒருபோதும் ஒரு நபரின் முதன்மை அடையாள அட்டை அல்ல என்று UIDAI சிஇஓ புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிய புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புதிதாக வழங்கப்படும் ஆதார் கார்டுகளில் உள்ள QR கோடைப் பயன்படுத்தி, இந்த ஆப் மூலம் போலியானதைக் கண்டறியலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News July 9, 2025

கோட்சே வழியில் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது: ஸ்டாலின்

image

காந்தி, அம்பேத்கர், பெரியார் வழியில் செல்லாமல், கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பேசிய அவர், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம் என்றார். தமிழகத்தைக் காக்க மாணவர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!