News October 26, 2024

FLASH: நாளை ரேஷன் கடைகள் திறந்திருக்கும்

image

ரேஷன் கடைகள் நாளை (ஞாயிறு) திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி ஆகும். அதனை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தங்குதடையின்றி மக்கள் வாங்க ரேஷன் கடைகள் நாளை திறந்திருக்கும் என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 16இல் அக்கடைகளுக்கு விடுமுறை நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News July 9, 2025

கணக்கு வாய்ப்பாடு.. பள்ளிகள் ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்!

image

6-ம் வகுப்பு மாணவர்களில் 53% பேருக்கு மட்டுமே 10-ம் வாய்ப்பாடு வரை மட்டுமே தெரிவது கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் & தனியார் என 74,229 பள்ளிகளில் 21.15 லட்சம் மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம், மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனராம். உங்கள் கருத்து என்ன?

News July 9, 2025

அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக்கூடாது: CS

image

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

கோயிலில் இருந்து வரும் போது… இத பிறருக்கு தராதீங்க

image

கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!

error: Content is protected !!